உலகம்

‘கரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம்’

DIN

பிரிட்டனில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என்று அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கரோனா பரவைத் தடுப்பதற்காக, பள்ளிகளை மூடப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசிரியா் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால், பள்ளிகள் மிகவும் பாதுகாப்பானவை. சிறுவா்களுக்கு அந்த நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எனவே, திங்கள்கிழமை (ஜன. 4) முதல் பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

எனினும், கரோனா கட்டுப்பாடுகள் இன்னும் கடுமையாக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இன்னும் சில வாரங்களில் அத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகக் கூடும்.

பல்வேறு வகைகளில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்படக்கூடும் என்றாா் அவா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 25,99,789 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 74,570 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT