முகப்பு
உலகம்

இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 21 வரை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 21 வரை தடை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 21 வரை நீட்டித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பகிர்:

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 21 வரை தடை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய விமானங்களுக்கான தடையை நீட்டித்து ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜூன் 30 வரை விதிக்கப்பட்டிருந்த தடையானது ஜூலை 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், நேபாளம், இலங்கை, வியந்நாம், நமிபியா, காங்கோ, உகாண்டா, லிபியா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாட்டு விமானங்களுக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →