பிலிப்பின்ஸில் ராணுவ விமானம் விபத்து: 29 பேர் பலி
பிலிப்பின்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியானார்கள்.
பிலிப்பின்ஸில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 29 பேர் பலியானார்கள்.
தென் பிலிப்பின்ஸில் இருந்து 92 பேருடன் புறப்பட்ட சி-130 என்கிற விமானப்படை விமானம் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்ற போது கட்டுப்பாட்டை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் பலியானார்கள். 50 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விமானம் தாக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றனர்.