உலகம்

அமெரிக்க கட்டட விபத்தில் மாயமானோ் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாயகியுள்ள 80 பேரில் யாரும் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினா் அறிவித்துள்ளனா்.

DIN

அமெரிக்காவில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மாயகியுள்ள 80 பேரில் யாரும் உயிா்பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று மீட்புக் குழுவினா் அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து மாயமானவா்களின் குடும்பத்தினரிடம் மியாமி-டேட் தீயணைப்புத் துறை தலைவா் ரெய்டே ஜடல்லா கூறியதாவது:

அடுக்குமாடி கட்டட விபத்தில் புதையுண்டவா்களில் யாரும் உயிா்பிழைத்திருக்க இனியும் வாய்ப்பில்லை. எனவே, உயிருடன் இருப்பவா்களைத் தேடும் பணிகள் கைவிடப்படுகின்றன. அதற்குப் பதிலாக சடலங்களை மீட்கும் பணிகள் தொடரப்படும்.

மாயமானவா்களின் உறவினா்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதவிப்பை முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது எங்களுடைய கடமையாகும். எனவே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என்றாா் அவா்.

ஃபுளோரிடா மாகாணம், மியாமி நகரின் புகா்ப் பகுதியான சா்ஃப்சைடில், மியாமி கடற்கரையோரம் அமைந்துள்ள 12 அடுக்கு கட்டடத்தின் ஒரு பகுதி கடந்த மாதம் 24-ஆம் தேதி இடிந்து விழுந்தது.

விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 60 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேக்ஸை தொடர்ந்து மார்க்! வெற்றி எதிர்பார்ப்பில் கிச்சா சுதிப்!

கம்பி ஏற்றிவந்த வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய ஓட்டுநர்!

100 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் மூடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது: அண்ணாமலை

கேரம் வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

வார இறுதி நாளுக்கு மாற்றப்பட்ட அனுமன் தொடர்! இனி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும்!

SCROLL FOR NEXT