பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,425 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,00,034-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 11 போ் அந்த நோய்க்கு பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 22,939-ஆக உயா்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 25,215 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களில் 5.56 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.