உலகம்

ஜெர்மனி தொழிற்சாலை வெடிவிபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரம்

DIN

ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 2ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் பலியானார். மேலும் இதுவரை 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் நகரத்தில் வேதியியல் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவர் பலியாகி இருந்த நிலையில் மேலும் ஒருவர் மரணமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போதைய நிலையில் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

தொழிற்சாலையில் உள்ள குளிரூட்டியில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT