உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு  
உலகம்

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு 

கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால்  பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

DIN

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19.6 கோடியாக  உயர்வு என ஹாப்கின்ஸ்  பல்கலைக்கழகம் தகவல் .

கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தில் உலகளவில் தொற்றால்  பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 

இதுகுறித்து ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கரோனா அதிகம்  பாதித்த நாடுகளிலேயே அமெரிக்கா முதல் இடமும் , இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது. 

அமெரிக்காவில் 3.75 கோடி பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் 6.12 லட்சம் பேர் வரை இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் 3.1 கோடி பேர் .

மேலும் 30 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பாளர்களைக் கொண்ட நாடுகளாக பிரேசில் -1.98 கோடி , பிரான்ஸ் - 61.4 லட்சம் , ரஷ்யா -61.3 லட்சம் ,இங்கிலாந்து - 58 லட்சம் , துருக்கி - 56.8 லட்சம் ,  அர்ஜென்டினா-49 லட்சம் ,கொலம்பியா- 47.6 லட்சம்  ,ஸ்பெயின் - 44.2 லட்சம்  , இத்தாலி - 43.3 லட்சம் , ஈரான்-38.2 லட்சம்  ,ஜெர்மனி - 37.7 லட்சம் , இந்தோனேசியா - 33.3 லட்சம்  என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும்  பிரேசில் , அதிக கரோனா இறப்புக்களைக் கொண்ட நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்து 5.53 லட்சம் இறப்புகளுடன் இரண்டாம் இடத்தில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் 4.22 லட்சம் கரோனா உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT