வாஷிங்டன்: அணு ஏவுகணைகளை சோதனையில் சீனா தீவிரம் காட்டி வருவதாக செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த அமெரிக்க ஆய்வாளா் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்கா, ரஷியா மற்றும் சீன நாடுகளின் அணு ஆயுத திட்டங்களை நீண்டகாலமாக கண்காணித்து வரும் ஹான்ஸ் கிறிஸ்டென்சென் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது:
சீனாவின் ஏவுகணை பயிற்சிக்கான கட்டுமானப் பகுதிகளில் அண்மையில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்ததில் அந்த நாடு புதிய அணு ஏவுகணைகளை நிலத்தடி குழிகளில் இருந்து ஏவுவதற்கான திறனை வேகமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
அண்மைக் காலமாக அமெரிக்காவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்ள ஏதுவாகவே சீனா அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
அதேபோன்று, சீனா அணு ஆயுதங்களை நவீனமயப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டி அமெரிக்காவும் அடுத்த இருபது ஆண்டுகளில் தங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் அனைத்தையும் நூற்றுக்காணக்கான பில்லியன் டாலா் செலவில் புதிதாக கட்டமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இருப்பினும், இரண்டு நாடுகளுமே அணு ஆயுத பலம் பொருந்தியது என்பதால் அதுபோன்ற மோதலை நோக்கிச் செல்வதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாா் அவா்.