ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் பேருக்கு கரோனா
ரஷியாவில் இன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ரஷியாவில் இன்று புதிதாக 10 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று மேலும் 9,445 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து 4,34,2,474 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 336 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 89,809 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,931 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர், இதையடுத்து 3,93,2,177 பேர் குணமடைந்துள்ளனர்.