பெருகி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு இறுதியில் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு ஆன்லைனுக்கு மாறிய சம்பவம் நடந்துள்ளது. 
உலகம்

கரோனா அச்சுறுத்தல்: முழுக்க ஆன்லைனுக்கு மாறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் மாநாடு

பெருகி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு இறுதியில் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு ஆன்லைனுக்கு மாறிய சம்பவம் நடந்துள்ளது.

DIN

பிரசல்ஸ்: பெருகி வரும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு இறுதியில் நடக்கவிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாடு ஆன்லைனுக்கு மாறிய சம்பவம் நடந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் அதிபர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாநாடு, இந்த வார இறுதியில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ஜெர்மனியின் பிரசல்ஸ் நகரத்தில் நடைபெறுவதாக இருந்தது.  ஆனால் தற்போது ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகளில் கரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வருவதால் தற்போது அந்த மாநாட்டினை ‘விடியோ கான்பெரன்ஸிங்’ முறையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரான சார்லஸ் மைக்கேலின் செய்தித் தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒன்றியத்தின் தலைவர்கள் கூடிப் பேசுவது வழக்கமாகும். தற்போது கரோனா சூழலின் நடுவிலும் அவ்வப்போது விடியோ  வழி சந்தித்து இருந்தாலும், தற்போது நடைபெற உள்ள மாநாடு, 2020-இன் மத்தியில் நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு நடைபெற உள்ள ஒன்றாகும்.

மாநாட்டின் செயல் திட்டங்களில் கரோனா குறித்த விவாதங்கள் முக்கியத்துவம் பெரும் அதேநேரத்தில் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கரோனா தடுப்பூசி பிரசாரத்தை முன்னெடுப்பது மற்றும் ரஷ்யா, சீனா உடனான உறவுகளைப்  பராமரிப்பது குறித்தும் பேச்சுக்கள் நடைபெறும் என்று தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT