ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
உலகம்

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

மாஸ்கோ: ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கரோனா கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 84 நகரங்களில் 9,299 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,117 பேருக்கு ( 12 சதவிகிதம்) நோய் அறிகுறிகள் இல்லாமலே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ஒட்டுமொத்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,456,869-ஆக அதிகரித்துள்ளது. தொற்று வீதமானது 0.22 என்ற விகிதத்தில் அதிகரித்து வருகிறது.

நகரங்களின் வரிசையில் 1,511 நோயாளிகளுடன் மாஸ்கோ முதலிடத்திலும், 881 நோயாளிகளுடன் செயின்ட் பீட்டர்ஸ்பார்க் இரண்டாம் இடத்திலும் உள்ளது.

அதேநேரம் இதுவரை கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்னிக்கை 4,069,395-ஆக  உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT