பிரேசிலில் கரோனா பாதிப்பு 1.2 கோடியைத் தாண்டியது!
பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியது.
பிரேசிலில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டியது.
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில நாள்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.
அந்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 49,293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,047,526 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரேநாளில் 1,383 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 295,425 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,247,939 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 10,507,995 பேர் குணமடைந்துள்ளனர்.
Advertisement