உலகம்

நேபாளத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கும் இந்தியா

DIN

மானிய உதவியின் கீழ் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாளம் நாட்டிற்கு இந்தியா வழங்க உள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் நேபாளம் நாட்டிற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்க உள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில், 3,48,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து நேபாளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT