இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது தென்கிழக்கின் பிளிட்டர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு 7.09 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது 57 கி.மீ தொலைவிலும், கடற்பரப்பின் கீழ் 110 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் பெரிய அளவில் சாத்தியம் இல்லாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
கிழக்கு ஜாவாவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள பேரிடர் அமைப்பின் உயர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தொடர்பு கொண்டுள்ளதாகவும், பிளிட்டர் மாவட்டத்தில் மிகக் குறைவான பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாலியின் சில பகுதிகளான குட்டா, டென்பசார், மற்றும் கியானார் மற்றும் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்திலும் இந்த அதிர்ச்சி உணரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.