பிரேசிலில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனாவுக்கு பலி
பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசில் நாட்டில் ஒரேநாளில் 2,215 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,
கடந்த 24 மணி நேரத்தில் 76,855 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 15,970,949 பேருக்குத் தொற்று பரவியுள்ளது.
மேலும், ஒரேநாளில் 2,215 பேர் பலியாகியுள்ளதையடுத்து, மொத்தம் இதுவரை 4,46,309 பேர் இறந்துள்ளனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கரோனா இறப்புகளை பிரேசில் பதிவு செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியாவைத் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தென் அமெரிக்க நாட்டில் கரோனாவின் புதிய அலை அனுபவித்து வருகிறது. இதன் விளைவாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்துள்ளன.
பிரேசிலில் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.