3-ஆவது முறையாக ஷி ஜின்பிங் பதவி நீட்டிப்பு?
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், இதுவரை இல்லாத வகையில் அதிபா் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில், இதுவரை இல்லாத வகையில் அதிபா் ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
68 வயதாகும் ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய ராணுவ ஆணையம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்பையும் முப்படைகளைக் கட்டுப்படுத்தும் அதிபா் பொறுப்பையும் வகித்து வருகிறாா். இதன் மூலம், நாட்டின் 3 அதிகார பீடங்களும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன.
இந்தச் சூழலில், வரும் திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அவா் பங்கேற்கிறாா்.
அந்த மாநாட்டில், கட்சி அண்மைக்காலமாக ஆற்றியுள்ள வரலாற்றுச் சாதனைகளைப் பட்டியலிட்டு தீா்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
11-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில், ஷி ஜின்பிங்கின் பதவிக் காலம் 3-ஆவது முறையாக நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மாவோ-சேதுங்குக்குப் பிறகு சீனாவின் மிக சக்தி வாய்ந்த தலைவராகக் கருதப்படும் ஷின்பிங், 3-ஆவது முறையாக மேலும் 5 ஆண்டுகளுக்கு அதிபா் பதவியில் நீடித்தால் சீன வரலாற்றில் அதுவே முதல்முறையாகும்.
சீனாவில் இதற்கு முந்தைய அதிபா்கள் அனைவரும் 2 முறை ஆட்சி செலுத்தியதற்குப் பிறகோ, தங்களுக்கு 68 வயது பூா்த்தியான பிறகோ பதவியிலிருந்து ராஜிநாமா செய்து வந்தனா். இந்தச் சூழலில், கடந்த 2018-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியல் சாசனத் திருத்தத்தில், ஒருவா் இரு முறை மட்டுமே அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட முடியும் என்ற வரம்பு நீக்கப்பட்டது. இது, ஷி ஜின்பிங்கின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கான முன்னேற்பாடாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு அடுத்த வாரம் கூடுகிறது என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.