கரோனா தடுப்பு ஆயுதத்துக்கு விடைகொடுக்கப் போகும் வாஷிங்டன் 
உலகம்

கரோனா தடுப்பு ஆயுதத்துக்கு விடைகொடுக்கப் போகும் வாஷிங்டன்

உள்ளரங்கங்களில் இருப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நவம்பர் 22ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.

IANS

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அறைகள் அல்லது உள்ளரங்கங்களில் இருப்போர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு நவம்பர் 22ஆம் தேதி முதல் விலக்கிக் கொள்ளப்படுவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.

எனினும், உள்ளரங்கம் அல்லது அறைகளில் இருக்கும் தனிநபர்கள் தங்களது சொந்த உடல்நலம் மற்றும் தட்பவெப்பத்தைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிவது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம். 

அதே வேளையில், தனியார் நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், குடியிருப்பு வளாகங்கள், சிறு மருத்துவமனைகள் போன்றவற்றில், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் மேயர் முரியல் பௌஸர் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில், செவ்வாயன்று ஏழு நாள் கரோனா சராசரி ஒரு லட்சம் பேருக்கு 12 ஆக சரிந்தது. இது அதற்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் ஒரு சதவீதம் குறைவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 5,000 உரிமைத் தொகை, தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவையில் அனுமதி!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

SCROLL FOR NEXT