கோப்புப்படம் 
உலகம்

டிக்டாக் செயலிக்கான தடையை நீக்கியது பாகிஸ்தான்

சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான விடியோக்களை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியின் பயன்பாட்டுக்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

DIN

சட்டத்திற்கு புறம்பான வகையில் ஆபாசமான விடியோக்களை பதிவிட்டதாகக் கூறி தடை செய்யப்பட்ட டிக்டாக் செயலியின் பயன்பாட்டுக்கான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது.

ஆபாசமான விடியோக்களை பதிவேற்றம் செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூலை மாதம் டிக்டாக் செயலியை பாகிஸ்தான் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் டிக்டாக் நிறுவனத்தின் உத்தரவாதத்தைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் மீதான தடையை பாகிஸ்தான் அரசு நீக்கியுள்ளது. டிக்டாக் மீதான தடையை பாகிஸ்தான அரசு நீக்குவது இது நான்காவது முறையாகும்.

முன்னதாக ஒழுங்கீனமான மற்றும் அருவருக்கத்தக்க விடியோக்களை பதிவேற்றம் செய்து வெளியிட்ட புகாரின் அடிப்படையில் டிக்டாக் செயலிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து 60 லட்சம் விடியோக்களை டிக்டாக் செயலி தனது தளத்திலிருந்து நீக்கியது. சீன நிறுவனமான டிக்டாக் செயலி பாகிஸ்தானில் 3.9 கோடி பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT