தொடரும் புயல் பாதிப்பு: ஹாங்காங்கில் பள்ளிகள் மூடல்
புயல் பாதிப்பு காரணமாக ஹாங்காங் நகரத்தில் பள்ளிகள், பங்குசந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
புயல் பாதிப்பு காரணமாக ஹாங்காங் நகரத்தில் பள்ளிகள், பங்குசந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கொம்பாசு புயல் காரணமாக ஹாங்காங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பெய்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. நகரின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்கள்இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்: எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
Advertisement
இந்நிலையில் வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளிகள், பங்குசந்தை மற்றும் அரசு அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொம்பாசு புயலானது மணிக்கு 83 கி.மீ. வீசி வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் புதிதாக 357 பேருக்கு கரோனா தொற்று
முன்னதாக பிலிப்பின்ஸில் கொம்பாசு புயல் பாதிப்புக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.