உலகம்

இந்துக்களை கொன்றவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் -வங்கதேச பிரதமர்

DIN

வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு பலியான 4 இந்துக்களின் இறப்பிற்கு நீதி கிடைக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்திருக்கிறார்.

வங்கதேசத்தில் நேற்று(அக்.14) நடைபெற்ற துர்கா பூஜையின் போது பல்வேறு இந்து கோயில்களில் ஏற்பட்ட வன்முறைக் கலவரத்தில் 4 இந்துக்கள் கொல்லப்பட்டனர். இந்துக்கள் அதிகம் இருக்கும் 22 மாவட்டங்களில் துணை ராணுவப்படையினரை நிறுத்தியும் இந்தக் கலவரம் ஏற்பட்டதால் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனங்கள் எழுந்ததால் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா  , ‘ துர்கா பூஜையின் போது கலவரத்தை ஏற்படுத்தியவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்திருக்கிறது. விரைவில் தொழில்நுட்ப உதவியுடன்  பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்’என்று தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT