கீதா கோபிநாத் (கோப்புப்படம்) 
உலகம்

சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகும் கீதா கோபிநாத்

கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்தவந்த விடுமுறை     ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச நிதியத்தில் அவரால் மூன்றாண்டுகள் பணியாற்ற முடிந்தது. 

DIN

பொருளாதார நிபுணர் கீதா போகிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை ஆலோசகர் பதவியிலிருந்து விலகவுள்ளார். அதன் பின்னர், ஜனவரி மாதம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையில் மீண்டும் இணையவுள்ளார்.

கீதா கோபிநாத்துக்கு ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அளித்தவந்த விடுமுறை     ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, சர்வதேச நிதியத்தில் அவரால் மூன்றாண்டுகள் பணியாற்ற முடிந்தது. சர்வதேச நிதியத்தின் ஆராய்ச்சி துறையில் தலைவராக அவர் பணியாற்றிவந்தார்.

இந்த ஆராய்ச்சித்துறைதான், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிடுகிறது. இதன்மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடப்படுகிறது. கீதா கோபிநாத்துக்கு புகழாரம் சூட்டியுள்ள சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநரான கிறிஸ்டலினா ஜார்ஜீவா, "சர்வதேச நிதியத்தின் முதல் பெண் தலைவரான கீதா, பெருந்தொற்றின்போது விமரிசன பகுப்பாய்வை எழுதி வரலாறு படைத்துள்ளார்.

நிதியத்திற்கு அவர் ஆற்றிய பங்கு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கவை. எளிமையாக சொன்னால், சர்வதேச நிதியத்தின் பணியல் அவர் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. பெரும் மந்தநிலைக்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியைக் கடந்து செல்லும்போது அவருடைய கூர்மையான புத்திசாலித்தனம் மற்றும் சர்வதேச நிதி மற்றும் மேக்ரோ பொருளாதாரத்தைப் பற்றிய அவரின் ஆழமான அறிவிலிருந்து நாங்கள் பெரிதும் பயனடைந்தோம்.

கோவிட் -19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர உலகளாவிய தடுப்பூசி இலக்குகளை நிர்ணயிப்பதில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது. உகந்த காலநிலை தணிப்புக் கொள்கைகளை பகுப்பாய்வு செய்ய சர்வதேச நிதியத்துக்குள் ஒரு காலநிலை மாற்றக் குழுவை அமைக்க அவர் உதவி செய்தார்" என்றார்.

கடந்த 2018ஆம் ஆண்டு, சர்வதேச நிதியத்தின் தலைவராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT