முகப்பு
உலகம்

கரோனா பரவல்: சீன நகரில் முழு பொதுமுடக்கம்

சீனாவின் கன்சூ மாகாணத் தலைநகா் லான்ஷோவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

சீனாவின் கன்சூ மாகாணத் தலைநகா் லான்ஷோவில் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அந்த நகரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

40 லட்சம் போ் வசிக்கும் லான்ஷோ நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 பேருக்கு சமூகக் பரவல் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அதையடுத்து, அந்த நோய் மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக நகரம் முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தின்போது அத்தியாவசிய காரணங்களில்லாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →