உலகம்

மூட்டை சிமெண்ட் விலை ரூ. 2,350, இலங்கையில்!

DIN

இலங்கையில் 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமெண்ட் விலை, ரூ. 500 உயர்த்தப்பட்டுத் தற்போது ரூ. 2,350 ஆக விற்கப்படுகிறது.

இந்த விலை உயர்வு மார்ச் 31 இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சிமெண்ட் நிறுவனங்கள் உறுதி செய்துள்ளன.

எரிபொருள் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இந்த விலை உயர்வு முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஏற்கெனவே, கடந்த மார்ச் 13 ஆம் தேதி ரூ. 1,350 ஆக இருந்த சிமெண்ட்  மூட்டையின் விலையை ரூ. 500 உயர்த்தி, ரூ. 1,850 என விற்கத் தொடங்கினர்.

கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையில் மிகக் குறைந்த கால இடைவெளியிலேயே மீண்டும் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT