முகப்பு
உலகம்

இலங்கை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி?

இலங்கை லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள், இலங்கை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவது என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
இலங்கை ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி?
பகிர்:


இலங்கை லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள், இலங்கை ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகுவது என்று ஒருமனதாக முடிவெடுத்திருப்பதாகவும், காபந்து அரசு அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் தலைமையகத்தில், நேற்று மாலை கூடிய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனா தலைமையில் ஆலோசனை நடத்தினர்.

இலங்கையின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி விலகுவது குறித்து ஸ்ரீசேனா இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், காபந்து அரசை உருவாக்குமாறு விரிவான கடிதம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய அமைச்சர் தயாசிரி ஜெயசேகரா, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிபர் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவில்லை. இருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர், அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபட்சவை விலகுமாறு வற்புறுத்துவார்கள் என்று குறிப்பிட்டார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளும், இலங்கை மத்திய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, காபந்து அரசை ஏற்படுத்தி, நாட்டில் தற்போத நிலவும் பொருளாதார பற்றாக்குறையை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →