இலங்கை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே ராஜிநாமா
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் தவிப்பது வேதனையளிப்பதாகக் கூறி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பதவி விலகியிருப்பது, இலங்கை அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இந்தளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மே 1 முதல் இலங்கை அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி விவகாரங்கள் துறை பொறுப்புகளை வகித்து வரும் அமைச்சர் ரோஷன் ரணசிங்கே அறிவித்துள்ளார்.
உணவுப் பொருள்களுக்காக இலங்கை மக்கள் வரிசையில் நிற்பது வேதனையளிப்பதாக தனது ராஜிநாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.