உலகம்

இலங்கையில் கருவூலத் துறைச் செயலரும் ராஜிநாமா

DIN

இலங்கைப் பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கத் தற்போது அரசியல் குழப்பமும் மேலோங்கத் தொடங்கியுள்ளது.

தலைநகரில் அடுத்தடுத்த ராஜிநாமாக்களுடன் தற்போது கருவூலத் துறைச் செயலரின் விலகலும் இணைந்துள்ளது. 

தன்னுடைய சகோதரர் பசில் ராஜபட்சவிடமிருந்து நிதித் துறை அமைச்சர் பதவியைப் பறித்த அதிபர் கோத்தபய ராஜபட்ச, நிதித்துறை அமைச்சராக நீதித் துறையைக் கவனித்துவந்த அலி சாப்ரியை நியமித்தார்.

ஆனால், 24 மணி நேரத்துக்குள் அலி சாப்ரியும் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துவிட்டார்.

இதனிடையே, கருவூலத் துறைச் செயலராக இருந்த எஸ்.ஆர். அட்டிகலவும் தன்னுடைய ராஜிநாமாக் கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு அனுப்பியுள்ளார்.

நிதித் துறை அமைச்சர் பதவியும் காலியாக இருக்கும் நிலையில் அட்டிகலவும் ராஜிநாமா செய்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT