பெட்ரோல் விலை உயர்வு: வீதியில் இறங்கிய பெரு மக்கள் 
உலகம்

கட்டுக்கடங்காத பெட்ரோல் விலை உயர்வு: வீதியில் இறங்கிய பெரு மக்கள்

பெரு நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

DIN

பெரு நாட்டில் அதிகரித்து வரும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரு நாட்டின் நாளுக்குநாள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும் அதிகரித்துவரும் சுங்கக் கட்டண உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.

இந்நிலையில் எரிபொருள் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்வை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மேலும் எரிபொருள் விலை உயர்வை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாதத்திற்கு 10 சதவிகிதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

முன்னதாக பெரு நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

SCROLL FOR NEXT