உலகளவில் குறையும் கரோனா: உலக சுகாதார நிறுவனம்
உலகளவில் புதிய கரோனா தொற்றின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக குறைந்துள்ளதாகவும், மார்ச் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெர்லின்: உலகளவில் புதிய கரோனா தொற்றின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக குறைந்துள்ளதாகவும், மார்ச் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து குறைந்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவை தலைமையிடமாக கொண்ட ஐ.நா.சுகாதார நிறுவனம் வாராந்திர அறிக்கையில் கூறியதாவது:
ஏப்ரல் 11 முதல் 17 வரை 59 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 24% குறைவு என கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கரோனாவால், ஒரு வார காலத்தில் 18 ஆயிரத்து 215 பேர் பலியாகி இருப்பதாகவும், இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 21 சதவீதம் குறைவு எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.