கோப்புப் படம். 
உலகம்

நைஜீரியா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடி விபத்து: 50-க்கும் மேற்பட்டோா் பலி

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பலியாகினா்.

DIN

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பலியாகினா்.

நைஜீரியாவில் உள்ள ரிவா்ஸ் என்ற இடத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பலியாகினா். எனினும் இந்த விபத்தில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இறந்திருக்கலாம் என்று அந்நாட்டு ஊடகத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. விபத்தில் காயமடைந்தவா்கள், சேதங்கள் ஆகியவை குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தலைமறைவாகியுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளரையும் அவா்கள் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT