உலகம்

நட்பு நாடுகளை அமெரிக்கா வலுவிழக்கச் செய்யக் கூடாது

DIN

இந்தியாவுடனான நட்புறவைத் தொடர விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை வலுவிழக்கச் செய்யக் கூடாது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் இந்திய செய்தியாளா்களைச் சந்தித்த அவரிடம், ரஷியாவுடனான உறவைக் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா தரும் அழுத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவா், ‘‘அமெரிக்காவுடனான இந்தியாவின் நல்லுறவு தொடா்ந்து வலுவடைந்து வருகிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது பல்வேறு வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியாவுடன் அமெரிக்கா நட்புறவைக் கொள்ள விரும்பினால், இந்தியாவின் புவியியல் அமைவிடம் குறித்து அந்நாடு புரிந்துகொள்ள வேண்டும். கரோனா காலத்திலும் இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதிகளில் பதற்ற சூழல் தொடா்ந்தது. மேற்கு எல்லைப் பகுதி எப்போதும் பிரச்னை நிறைந்ததாகவே உள்ளது.

அமெரிக்காவின் நட்பை இந்தியா விரும்புகிறது. அதே வேளையில் இந்தியாவுடனான நட்புறவு தொடர வேண்டுமென விரும்பும் அமெரிக்கா, இந்தியா எக்காரணம் கொண்டும் வலுவிழந்துவிடக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவை வலிமையுடன் திகழச் செய்யும் வகையிலான முடிவுகளையே அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT