உலகம்

அல்-காய்தா தலைவா் காபூலில் இருந்தது தெரியாது: தலிபான்கள்

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

DIN

ஆப்கன் தலைநகா் காபூலில் அல்-காய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவா் அய்மான் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது தங்களுக்குத் தெரியாது என்று அந்த நாட்டின் ஆட்சியாளா்களான தலிபான்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கத்தாா் தலைநகா் தோஹாவிலுள்ள தலிபான்களின் அரசியல் பிரிவுத் தலைவா் சுஹைல் ஷாஹீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காபூலில் அல்-ஜவாஹிரி பதுங்கியிருந்தது அரசுக்குத் தெரியும் என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையல்ல. அது குறித்து ஆப்கன் அரசுக்கோ, தலைமைக்கோ எதுவுமே தெரியாது. காபூலில் அல்-ஜவாஹிரி இருந்ததற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காபூலில் ஆளில்லா விமானத்தின் மூலம் நவீன ஏவுகணைகளை வீசி அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டாா். அவருக்கு காபூலில் தலிபான் அமைப்பினா் அடைக்கலம் அளித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT