உலகம்

ஆகஸ்ட் 30ல் இலங்கையின் இடைக்கால பட்ஜெட் தாக்கல்

இலங்கை அதிபர் மற்றும் நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி இலங்கையின் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ளார்.

DIN

இலங்கை அதிபர் மற்றும் நிதியமைச்சரான ரணில் விக்கிரமசிங்க வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி இலங்கையின் இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்ய உள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நிதியத்திடம் இருந்து உதவி கோரியுள்ள நிலையில் இந்த இடைக்கால பட்ஜெட் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. 

இலங்கையின் அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 30ல் நிதியமைச்சராக இந்த இடைக்கால பட்ஜெட்டினைத் தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் அந்த வாரம் முழுவதும் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறும்.

இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் குறித்து ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது: “ இந்த இடைக்கால பட்ஜெட்டின் மூலம் இலங்கை மக்களின் தேவைகளை ஓரளவு சரி செய்ய முடியும். அவர்கள் தினமும் மின்சாரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டினை சந்தித்து வருகின்றனர். மருந்துப் பொருள்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த இடைக்கால பட்ஜெட் இந்த பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வாக அமையும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல்: காட்டாட்சிக்கு எதிராக பெண்கள் - பிரதமர் மோடி

வெண் மேகமே... கரிஷ்மா டன்னா!

பிக்-பாஸ் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்!

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் பொங்கல்தோறும் மகளிருக்கு ரூ.30,000: தேஜஸ்வி

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! | SIR | EC

SCROLL FOR NEXT