உலகம்

இந்தோனேசியா: நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் நிலக்கரி சுரங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 

இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். இருவர் காயமடைந்தனர், மேலும் ஒருவரை காணவில்லை.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 

சவாலுண்டோ நகரில் அமைந்துள்ள சுரங்கில் வெடிப்பு இன்று காலை 8.30 மணியளவில் நிகழ்ந்ததாக மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  காணாமல் போனவரை தேடும் பணியும், மீட்புப் பணியும் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT