உலகம்

சிலியில் காட்டுத்தீ: 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்

DIN

சிலி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகளை எரித்து நாசமாக்கியுள்ளது. 

சிலி நாட்டின் வால்பரைசோ பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்பு கட்டுக்கடங்காமல் வளர்ந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மரங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. 

காட்டுத்தீ பாதிப்பால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியுள்ளது. வெப்ப அலைகளின் காரணமாக இந்தக் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மீட்புப் படை அதிகாரிகள் இதுவரை 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் தீயில் எரிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

காட்டுத்தீ பாதிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT