உலகம்

போர்ச்சுகலில் கரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்தது

DIN

போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,745,383 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 2,442 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர், அவர்களில் 149 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 33,989 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஐந்து முதல் 11 வயதுக்குள்பட்ட 301,079 குழந்தைகள் உள்பட 8,798,287 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 5,061,810 பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT