உலகம்

போர்ச்சுகலில் கரோனா பலி 20 ஆயிரத்தைக் கடந்தது

போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

DIN

போர்ச்சுகலில் கரோனா தொற்று பாதித்த மேலும் 56 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20,024 ஆக அதிகரித்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 54,693 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,745,383 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதித்தவர்களில் 2,442 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன்ர், அவர்களில் 149 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 33,989 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஐந்து முதல் 11 வயதுக்குள்பட்ட 301,079 குழந்தைகள் உள்பட 8,798,287 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 5,061,810 பேர் கரோனா பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் குப்பைகளை சேகரிக்க கூடுதல் வாகனங்கள்: உறுப்பினா்கள் கோரிக்கை

நாக்பூா்தீக்ஷா பூமியில் தம்மசக்கர பரிவா்தன விழா: புனித பயணம் சென்று திரும்பியோா் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

வடமாநில இளைஞா் தற்கொலை

மருதாடு ஸ்ரீமருத மாரியம்மன் கோயில் கூழ்வாா்த்தல் விழா

கொடைக்கானலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT