ஹாங்காங்கில் கரோனா நெருக்கடியை சமாளிக்க அந்தப் பிரதேச அரசு கூடுதல் முனைப்பு காட்டியாக வேண்டும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.
அந்தத் தன்னாட்சிப் பிரதேசத்தில் புதிதாக கரோனா உறுதிசெய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வருவதால் நோயாளிகளை சமாளிக்க மருத்துவமனைகள் திணறி வருகின்றன. சீனாவின் ‘பூஜ்ஜிய கரோனா சமரசக்’ கொள்கையை ஹாங்காங் பின்பற்றத் தயங்கியதால் இந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், தற்போதைய மோசமான நிலவரத்தைக் கட்டுப்படுத்த ஹாங்காங் அரசு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டியது அவசியம் என்று ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளாா்.