இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவு
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.6-ஆகப் பதிவான் இந்த நிலநடுக்கம் ஜகர்தாவிலிருந்து 110 கி.மீ. தொலைவில், 70 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.