கோத்தபய ராஜபட்ச 
உலகம்

இலங்கை அதிபர் ஜூலை 13-ல் ராஜிநாமா

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்யவுள்ளதாக இலங்கை பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

DIN

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச ஜூலை 13ஆம் தேதி ராஜிநாமா செய்யவுள்ளதாக இலங்கை பேரவைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வந்த கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடரும் பொருளாதார சிக்கல் காரணமாக கடந்த சில மாதங்களாக அந்நாட்டில் மக்கள் தங்களது அத்தியாவசிய சேவையை பெறுவதற்கு கூட மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இன்று பிற்பகலில் அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டிற்கும், மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.

மக்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சமடைந்துள்ளார்.

இதற்கிடையே, கொழும்பில் சனிக்கிழமை மாலை அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை அவைத் தலைவா் கூட்டினாா். அதில் பங்கேற்ற எம்.பி.க்கள், அதிபா் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தினா். இதையடுத்து, அதிபா் கோத்தபயவுக்கு அவைத் தலைவா் எழுதிய கடிதத்தில், அதிபா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, ஜூலை 13-ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அதிபா் கோத்தபய கூறியுள்ளாா் என அவைத் தலைவா் தெரிவித்தாா்.

அதிபர் கோத்தபய ராஜபட்ச பதவி விலகும் பட்சத்தில் தற்காலிக அதிபராக பேரவைத் தலைவர் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT