தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் பலியானார்கள்.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள மதுபான விடுதிக்கு இன்று நள்ளிரவு மினிபேருந்தில் வந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு சுட்டனர். இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதையும் படிக்க- அசாமில் ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல்
தகவல் அறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த 11 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனையில் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.