உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.7 ஆக பதிவு

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்ததாவது:

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூல் நகரின் தெற்கே  137 கி.மீ. தொலைவில் இன்று காலை  நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது.  இந்த நிலநடுக்கம் 170 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச் சேதம் மற்றும் பொருட் சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. 

ஜூன் மாதம் தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள கோஸ்ட் உள்ளிட்ட நகரங்களில் நேரிட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகளில் 6.1 ஆகப் பதிவானது.

பத்திகா மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல வீடுகள் இடிந்து விழுந்து  1,000 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT