முகப்பு
உலகம்

மெக்சிகோவை தாக்கிய சூறாவளி: 10 பேர் பலி

மெக்சிகோவை தாக்கிய சூறாவளியில் 10 பேர் பலியாகினர்.

Updated On : 1 ஜூன் 2022, 6:11 pm IST
கோப்புப்படம்
பகிர்:

மெக்சிகோ: மெக்சிகோவை தாக்கிய சூறாவளியில் 10 பேர் பலியாகினர்.

வட அமெரிக்காவின் தெற்கே அமைந்துள்ள நாடு மெக்சிகோ. இந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அக்சகா என்ற மாகாணத்தை சக்திவாய்ந்த சூறாவளி நேற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளிக்கு அகதா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி தாக்கியதால் மெக்சிகோவின் அக்சகா பகுதியில்  சூறை காற்றுடன் கனமழை பெய்துள்ளது.  பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளியால்   வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். 

Advertisement

Advertisement

20-க்கும் அதிகமானோர் காணமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.