அஹ்சன் இக்பால் 
உலகம்

மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும்: பாக். அமைச்சர்

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.

DIN

பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க பாகிஸ்தான் மக்கள் டீ குடிப்பதை குறைக்க வேண்டும் என அந்நாட்டின் அமைச்சர் கூறியுள்ளார்.

சமீப காலமாக பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் தேவையற்ற இறக்குமதி செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் திட்டக்குழு அமைச்சரான அஹ்சன் இக்பால் “உலகிலேயே அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ.8,300 கோடிக்கு தேயிலை இறக்குமதி செய்யப்பட்டுள்ள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியில் இறக்குமதிக்கான தொகையைச் செலுத்த முடியவில்லை. அதனால், மக்கள் டீ குடிப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

அமைச்சரின் பேச்சால் அந்நாட்டு மக்களிடமிருந்து எதிர்ப்பு உருவாகியதுடன் பலரும் சமூக வலைதளங்களில் அரசை விமர்சித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT