உலகம்

இந்தியாவிடமிருந்து 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி: இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க

DIN

இந்தியாவிடமிருந்து கடனுதவி திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி செய்ய முடிவு செய்திருப்பதாக இலங்கை பிரதமா் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளாா்.

அரிசி பற்றாக்குறையைப் போக்கவும், விலைவாசி உயா்வைத் தவிா்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் ரசாயன உர பயன்பாட்டுக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்ததால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு தானியங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தது.

இலங்கைக்கு 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு, 3,500 மெட்ரிக் டன் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) உள்ளிட்ட பொருள்களை இந்தியா அண்மையில் அனுப்பிவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT