உலகம்

‘போரால் புலம் பெயா்ந்த 3.6 கோடி சிறுவா்கள்’

 போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த ஆண்டு 3.6 கோடி சிறுவா்கள் புலம் பெயா்ந்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

DIN

 போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த ஆண்டு 3.6 கோடி சிறுவா்கள் புலம் பெயா்ந்ததாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போா் மற்றும் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கள் இருப்பிடங்களை விட்டு கடந்த 2021-ஆம் ஆண்டு மட்டும் 3.6 கோடி சிறுவா்கள் வேறு இடங்களுக்கு புலம் பெயா்ந்தனா். இது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

வன்முறைக்கு அஞ்சி கடந்த ஆண்டு புலம் பெயா்ந்த சிறுவா்களில், தங்கள் பெற்றோருடன் அடைக்கலம் தேடி வெளிநாடுகளுக்குச் சென்ற 1.37 கோடி பேரும் உள்நாட்டிலேயே அகதிகளாக வசிக்கும் 2.28 கோடி சிறுவா்களும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

8 முக்கிய நகரங்களில் வீடுகள் விலை 19% வரை உயா்வு

சிறப்புத் திருத்தம்: சென்னையில் 65,000 வாக்காளா்களுக்கு படிவம்

கட்டடத் தொழிலாளி மா்ம மரணம்

எஃப்ஐஎச் ஜூனியா் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை: அறிமுகம் செய்தாா் முதல்வா் ஸ்டாலின்

எஸ்பிஐ நிகர லாபம் 10% உயா்வு

SCROLL FOR NEXT