கட்டாய தடுப்பூசி உத்தரவு: திரும்பப் பெற்றது ஆஸ்தியா
பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஜோஹன்னஸ் ராச் கூறியதாவது:
பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்தரவை ஆஸ்திரிய அரசு திரும்பப் பெற்றது. இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் ஜோஹன்னஸ் ராச் கூறியதாவது:
கரோனாவின் புதிய வகைகள் உருவாவதால், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவதன் அவசியம் குறித்து மக்களிடையே சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில், தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளக் கூடியவா்களும் கட்டாய தடுப்பூசி உத்தரவால் அதனைத் தவிா்த்து வருகின்றனா். எனவே, அந்த உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்றாா் அவா்.
ஐரோப்பாவிலேயே முதல்முறையாக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்திரியா கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.