உக்ரைனுடன் இன்றிரவு 2-ஆம் கட்ட பேச்சுக்கு தயார்: ரஷியா
உக்ரைனுடன் இன்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷிய தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுடன் இன்றிரவு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷிய தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலைமுதல் தீவிர தாக்குதலை நடத்தி வரும் ரஷியப் படைகள் வேகமாக முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.
இதையும் படிக்க | கெர்சன் நகரைக் கைப்பற்றியதாக ரஷிய ராணுவம் அறிவிப்பு!
இந்நிலையில், இன்றிரவு உக்ரைன் அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயராக இருப்பதாக ரஷிய தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பெலாரஸ் நாட்டில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சு வார்த்தையில் இரு நாட்டிற்கும் உடன்பாடு எட்டாதது குறிப்பிடத்தக்கது.