உலகம்

வடகொரியா ஏவுகணை சோதனை: கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

DIN

தென்கொரியாவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 

இந்நிலையில் தென்கொரியாவில் தற்போது அதிபர் தேர்தல் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நோபோ கிஷி வெளியிட்டுள்ள தகவலின்படி 300 கி.மீ. தொலைவு சென்று தாக்கும் வகையிலான பாலிஸ்டிக் வகை ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும் இதுதொடர்பாக தகவலை சனிக்கிழமை வரை வடகொரியா உறுதிப்படுத்தவில்லை. 

வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT