முகப்பு
உலகம்

மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை போர்மழை பொழிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
மரியுபோல் மீது குண்டுமழை பொழிந்த ரஷியா: படைகள் குவிப்பு
பகிர்:


மரியுபோல்: உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோல் மீது, ரஷிய படைகள் வியாழக்கிழமை குண்டு / ஏவுகணை மழை பொழிந்துள்ளது.

செயற்கைக்கோள் புகைப்படங்கள், மரியுபோல் அருகே ரஷிய படைகள் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.  உக்ரைனின் தலைநகர் கீவ் நகரமே இரண்டாகப் பிளக்கப்பட்டு, ஒரு புறம் நகரப் பகுதியும், மற்றொரு பக்கம் வனப்பகுதியாகவும், நடுவில் படைகள் குவிக்கப்பட்டு, எந்நேரமும் கடுமையான தாக்குதலை நடத்த தயாராக இருப்பதைக் காட்டுகிறது.

மரியுபோல் பகுதியில் அமைந்திருந்த மகப்பேறு மருத்துவமனை மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியானதற்கு சர்வதேச நாடுகள் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கும் நிலையில், இந்த படைக்குவிப்பை ரஷியா நடத்தியுள்ளது.

Advertisement

உக்ரைன் நாடு, மருத்துவமனை மீதான தாக்குதலை போர்க் குற்றம் என்று சாடியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments