முகப்பு
உலகம்

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

Updated On : 3 ஏப்ரல், 2026 at 10:39 PM
கோப்புப் படம்
பகிர்:

அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் அபுதாபி உள்ளிட்ட நகரங்கள் மீது ஈரான் வெள்ளிக்கிழமை மீண்டும் ஏவுகணைகள், ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது. அவற்றை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்பாதுகாப்பு சாதனம் இடைமறித்து தாக்கி அழித்தது. அப்போது ஏவுகணை பாகங்கள் கீழே சிதறி விழுந்ததில் 6 போ் காயமடைந்தனா். இதில் 5 இந்தியா்களும் அடங்குவா். எஞ்சிய ஒருவா், நேபாளத்தை சோ்ந்தவா் ஆவாா்.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரானின் 18 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகள், 4 க்ரூஸ் ரக ஏவுகணைகள், 47 ட்ரோன்கள் வான் பாதுகாப்பு சாதனம் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments