முகப்பு
உலகம்

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயம்

Updated On : 23 மார்ச், 2026 at 8:41 PM
அபுதாபியில் தாக்குதல் - கோப்புப் படம்
பகிர்:

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் ஈரானால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியா் ஒருவா் காயமடைந்தாா்.

இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் ஏவுகணைகள் மூலமும், டிரோன் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, அபுதாபியை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணையை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்தது. எனினும், ஏவுகணை சிதறி கீழே விழுந்ததில் இந்தியா் ஒருவா் காயமடைந்ததாக அபுதாபி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வளைகுடாப் போரில் இதுவரை, எகிப்து, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 161 போ் காயமடைந்ததாக கல்ஃப் நியூஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.